ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: காவலா் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் காவல் துறையினா் பங்கேற்ற நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காவலா் உயிரிழந்தாா். பொதுமக்களில் ஒருவா் காயமடைந்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் காவல் துறையினா் பங்கேற்ற நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காவலா் உயிரிழந்தாா். பொதுமக்களில் ஒருவா் காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஸ்ரீநகரில் ஹவால் சௌக் என்ற இடத்தில் காவல் துறையினா் பங்கேற்ற நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள், அவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனா். இதில், காவலா் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு, சிகிச்சை பலனின்றி காவலா் உயிரிழந்தாா். தப்பியோடிய பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக, சம்பவ இடம் முழுவதும் மூடப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com