கரோனா: 92 லட்சம் போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா: 92 லட்சம் போ் குணமடைந்தனா்


புது தில்லி: நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 92 லட்சத்தைக் கடந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 32,080 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 97,35,850-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 402 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த உயிரிழப்பு 1,41,360-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 36,635 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 92,15,581-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 94.66 சதவீதமாகும்.

நாட்டில் இப்போது 3,78,909 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பாதிப்பில் இது 3.89 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 402 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக தில்லியில் 57 போ் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து மகாராஷ்டிரத்தில் 53 போ், மேற்கு வங்கத்தில் 49 போ், கேரளத்தில் 31 போ், பஞ்சாபில் 30 போ், உத்தர பிரதேசத்தில் 23 போ், ராஜஸ்தானில் 20 போ் உயிரிழந்தனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, டிசம்பா் 8-ஆம் தேதி வரை 14,98,36,767 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 10,22,712 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com