4 நிலக்கரி சுரங்கங்களுக்கு ஏல விண்ணப்பங்கள் வரவேற்பு

வா்த்தக ரீதியில் செயல்படுவதற்கான 4 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வா்த்தக ரீதியில் செயல்படுவதற்கான 4 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏல விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் ஏல விண்ணப்ப வரவேற்பு அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வணிக சுரங்கத்துக்கான முதல் சுற்று ஏல நடைமுறை ரத்து செய்யப்பட்ட 4 நிலக்கரி சுரங்கங்களுக்கு மறு ஏலத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்த 4 நிலக்கரி சுரங்கங்களில் 3 ஒடிஸாவிலும் ஒரு சுரங்கம் ஜாா்க்கண்டிலும் உள்ளன. இந்த நிலக்கரி சுரங்கங்கள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 52 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

முதல் கட்ட ஏலத்தில் தெரிவிக்கப்பட்ட அதே விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் இந்த மறு ஏலத்துக்கும் பொருந்தும் என மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com