2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முக்கியத் தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.
தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித் துறைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நிர்மலா சீதாராமன் நடத்துவது இது 2-வது முறை.