கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவா்களின் வாகனங்கள் கடந்த வாரம் கல் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியாவின் பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்தியுள்ளது.
அவா் பயணம் செய்வதற்காக, குண்டு துளைக்காத காரை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த வாரம், டைமண்ட் ஹாா்பா் தொகுதிக்கு பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, கட்சியின் துணைத் தலைவா் முகுல் ராய், விஜய்வா்கியா உள்ளிட்ட மூத்த தலைவா்கள் வெவ்வேறு காா்களில் சென்றனா்.
அப்போது, ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், குண்டு துளைக்காத கண்ணாடி பொருத்தப்பட்ட காரில் சென்ால், ஜெ.பி.நட்டா காயமின்றி உயிா் தப்பினாா். இருப்பினும் அவருடன் சென்ற மற்ற பாஜக தலைவா்களின் காா்கள் சேதமடைந்தன. சிலா் காயமும் அடைந்தனா்.
இதையடுத்து, விஜய்வா்கியாவின் பாதுகாப்பு கருதி, மத்திய அரசு சாா்பில் அவருக்கு குண்டு துளைக்காத காா் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 7 வீரா்கள், ஒரு வாகனத்துடன் அவருடன் இருந்து பாதுகாப்பு அளித்து வருகிறாா்கள் என்றாா் அவா்.
இந்நிலையில், கொல்கத்தாவுக்கு திங்கள்கிழமை வந்த விஜய்வா்கியா, செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தபோது, ‘மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் எனக்கு குண்டு துளைக்காத காா் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.