மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,994 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,88,767 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4,467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 75 பேர் பலியாகியுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 17,78,722 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 48,574 பேர் பலியாகியுள்ளனர்.
இன்னும் 60,352 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.