திருப்பதி: திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 36,055 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இவா்களில் 14,039 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 10 ஆயிரம் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 1,000 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்களை தற்காலிகமாக தேவஸ்தானம் நிறுத்தியுள்ளது.
அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 93993 99399.