நாகலாந்து மாநிலத்தின் மோகோக்சுங் பகுதியில் வியாழக்கிழமை 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்த தகவலின்படி,
வியாழக்கிழமை மதியம் 1.39 மணியளவில் மோகோக்சுங் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 100 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.