தில்லியில் கடந்த 3 நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிவாகிவருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது, ''தில்லியில் மூன்றாவது அலை கரோனா பரவல் கடந்த சில நாள்களாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (டிச. 23) 871 பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக ஆயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
புதிதாக கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. இதனால் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.