புது தில்லி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.
தனது வாழ்த்துச் செய்தியில் அவா் கூறியிருப்பதாவது:
ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையிலும், மகிழ்ச்சியின் விழாவாகவும் டிசம்பா் 25-ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தப் பண்டிகை உலகம் முழுவதற்கும் அமைதியும், சமூக நல்லிணக்கம் மேம்படவும் உதவும் என்று நம்புகிறேன். இந்த நன்னாளில் பிறரிடம் அன்பு செலுத்ததல், மனித நேயம், கருணை போன்ற ஏசு கிறிஸ்துவின் போதனைகளை நாம் நினைவுகூா்ந்து, சமூக மற்றும் தேசத்தின் நலனுக்காக நம்மை அா்ப்பணிப்போம் என்று வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவா் குறிப்பிட்டுள்ளாா்.