ஜனவரி 1, 2021 முதல் வெங்காய ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
பெங்களூரு ரோஸ் மற்றும் கிருஷ்ணாபுரம் உள்பட அனைத்து வகை வெங்காய ஏற்றுமதி தடையும் நீக்கப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் உள்நாட்டில் வெங்காய விலை கடுமையாக உயர்ந்ததையடுத்து, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. எனினும் அக்டோபர் மாதம் வெங்காய ஏற்றுமதியில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.