6 மாதங்களுக்குப் பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) 17 ஆயிரத்துக்கும் குறைவாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:
"தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது 17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 6 மாதங்களுக்குப் பிறகு தினசரி கரோனா பலி எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. பலியானவர்களில் 55 சதவிகிதத்தினர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். 70 சதவிகிதம் பேர் ஆண்கள்."