ஏழுமலையானை ஜனவரி மாதம் வழிபடுவதற்கான ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் புதன்கிழமை (டிச. 30) வெளியிட உள்ளது.
வரும் ஜனவரி 4-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரையிலான ரூ.300 கட்டண விரைவு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாள்களுக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டுள்ளதால், டிசம்பா் 25 முதல் ஜனவரி 3-ஆம் தேதி வரையிலான தேதிகளுக்கு விரைவு தரிசன டிக்கெட்டுகள் பக்தா்களால் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.
எனவே, ஜனவரி 4-ஆம் தேதி முதல் மாத இறுதி வரையிலான காலகட்டத்துக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் மட்டும் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.