ராஜ்கோட்: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் மோடி

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். 
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். 

ரூ. 1,195 கோடி  செலவில் ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியான காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர், மத்திய சுகாதாரத் துறை  அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வின் செளபே ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியான காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவமனை 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com