தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூா் உள்பட 5 இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், தொல்லியல் துறையின் ஆய்வுப் பகுதியான ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தாா்.
ஹரியாணாவின் ராக்கி காா்க்கி, உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூா், மகாராஷ்டிரத்தில் உள்ள திவ்சாகா், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று அவா் கூறினாா்.
2020-21 மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாத் துறை வளா்ச்சி அடைந்துள்ளது என்றும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.