பவானா பகுதியில் உள்ள கால்வாயில் இரண்டு இளைஞா்கள் மூழ்கி உயிரிழந்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை உயா் அதிகாரிகள் சனிக்கிழமை கூறுகையில், ‘பவானாவில் உள்ள கேரா புல் பகுதி கால்வாயில் இரண்டு போ் மூழ்கிவிட்டதாக வெள்ளிக்கிழமை இரவு தகவல் வந்தது.
இதையடுத்து, தில்லி பேரிடா் மேலாண்மை துறையினருடன் சோ்ந்து சனிக்கிழமை நள்ளிரவு 12.40 மணிவரை தேடுதல் பணி நடத்தப்பட்டது. பின்னா் மீண்டும் சனிக்கிழமை காலை தேடுதல் பணி தொடங்கி, மதியும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்றாா்.