மகாராஷ்டிரத்தில் கல்லூரி வாசல் முன்பு பெண் விரிவுரையாளர் உயிருடன் எரிப்பு!

மகாராஷ்டிரத்தில் கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் விரிவுரையாளர் ஒருவர் கல்லூரி வாசல் முன்பு உயிருடன் எரிக்கப்பட்டார். 
மகாராஷ்டிரத்தில் கல்லூரி வாசல் முன்பு பெண் விரிவுரையாளர் உயிருடன் எரிப்பு!

மகாராஷ்டிரத்தில் கல்லூரியில் பணியாற்றி வரும் பெண் விரிவுரையாளர் ஒருவர் கல்லூரி வாசல் முன்பே உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரம் மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அன்கிதா(25) என்பவர் பெண் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை 7 மணியளவில் அவர் தனது கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, கல்லூரியின் வாசலில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்டார். மர்ம நபர் ஒருவர் வந்து அன்கிதாவின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றார். 

உடனே அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அவர் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 40% தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதன் பின்னணியில் உள்ள காரணத்தை கண்டறிவதாகவும் வர்தா போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்வீவர் பாண்டிவர் உறுதி அளித்துள்ளார். 

பெண் விரிவுரையாளர் ஒருவர் கல்லூரி வாசல் முன்பே தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com