தில்லி கிடங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி கட்டுப்படுத்தினர்.
பிஜ்வாஸன் எனுமிடத்தில் அமைந்துள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கிடங்கு முழுவதும தீ பரவியது. இதில் பொருள்கள் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த 14 தீயணைப்பு வீரர்கள், சுமார் 5 மணிநேர போராட்டத்துக்குப் பின் தீயைக் கட்டுப்படுத்தினர். இருப்பினும் தீ விபத்து ஏற்பட்டதற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபகாலங்களில் தலைநகர் தில்லியில் அடிக்கடி நடக்கும் இதுபோன்ற தீ விபத்து சம்பவங்கள் பொதுமக்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் உயிர்ச்சேதம் ஏற்பட்ட சில இடங்களில் விதிமீறல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.