மாநிலங்களவையில் சில முக்கியமான சட்டம் இயற்றும் பணி உள்ளதால், அனைத்து எம்.பி.க்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பாஜக வெளியிட்டுள்ள உத்தரவில், "மாநிலங்களவையில் நாளை (செவ்வாய்கிழமை, பிப்ரவரி 11, 2020) சில மிக முக்கியமான சட்டம் இயற்றும் பணி கொண்டுவரப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தி, நிறைவேற்றப்படவுள்ளது. எனவே, அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.