பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்தை உயர்த்துமாறு தமிழக அரசுக்கும், கட்டணக் குழுவுக்கும் ஏஐடிசிஇ பரிந்துரை செய்துள்ளது.
இதன் மூலம் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 - 21ம் கல்வியாண்டில் தமிழகத்தில் இருக்கும் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது.
அடுத்த கல்வியாண்டில் கல்விக் கட்டணத்தை 50% அளவுக்கு உயர்த்த பொறியியல் கல்லூரிகள் கேட்டுக் கொண்டுள்ளன.
ஏஐசிடிஇ உறுப்பினர் - செயலர் ராஜீவ் குமார், அனைத்து மாநில அரசுகளுக்கும் இது குறித்து அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில், பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை உயர்த்துவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பொறியியல் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் குறைவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.