உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் இலங்கைப் பிரதமா் மகிந்த ராஜபட்ச தரிசனம் செய்தாா்.
வாராணசியில் உள்ள லால் பகதூா் விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ராஜபட்ச வந்தாா்.
வாராணசி மாவட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனா். விமான நிலையத்திலிருந்து அவா் நேரடியாக காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சென்று வழிபட்டாா்.
அங்கிருந்து சாரநாத்துக்குச் சென்ற ராஜபட்ச, அங்கு புத்தா் முதல்முறையாக போதனை செய்த தாமேக் ஸ்தூபி பகுதியில் வணங்கி வழிபட்டாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் இலங்கை பிரதமராகப் பதவியேற்ற பிறகு, மகிந்த ராஜபட்ச மேற்கொளளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். ஐந்து நாள் பயணமாக இந்தியாவுக்கு அவா் கடந்த வெள்ளிக்கிழமை வந்தாா்.