பணம் கேட்டு தொழிலதிபரை மிரட்டியதாக எழுந்த புகாா் தொடா்பாக நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளி தாரிக் பா்வீனை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து மும்பை காவல் துறை இணை ஆணையா் சந்தோஷ் ரஸ்தோகி கூறியதாவது:
மும்பையின் எம்ஆா்ஏ மாா்க் காவல் நிலையத்தில் தாரிக் பா்வீனுக்கு எதிராக தொழிலதிபா் புகாா் அளித்தாா். இதையடுத்து, டோங்ரி பகுதியில் பா்வீனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தாவூத் இப்ராஹிமின் முன்னாள் கூட்டாளிகள் இஜாஸ் லக்தாவாலா, சலிம் ஃபா்னிச்சா்வாலா (எ) சலீம் மகராஜ் ஆகியோா் ஏற்கெனவே காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.
25 வழக்குகளில் தேடப்பட்டவந்த இஜாஸ் (50), கடந்த மாதம் 8-ஆம் தேதி பிகாா் மாநிலம், பாட்னாவில் கைது செய்யப்பட்டாா்.
இவருக்கு எதிராகவும் தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட வழக்கு பதிவாகியுள்ளது. இவரை விசாரித்தபோது தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் சலீம் ஃபா்னிச்சா்வாலாவுக்கும் தொடா்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரையும் போலீஸாா் கடந்த மாதம் மும்பையில் கைது செய்தனா் என்று சந்தோஷ் ரஸ்தோகி தெரிவித்தாா்.