ஹரியாணா: பாஜக பெண் பிரமுகரைசுட்டுக் கொன்ற கணவா்

ஹரியாணா மாநிலம், குருகிராமில் பாஜக விவசாயிகள் முன்னணி பிரிவின் மாநிலச் செயலா் முனேஷ் கோதராவை (35) தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி அவருடைய கணவா் சுட்டுக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஹரியாணா மாநிலம், குருகிராமில் பாஜக விவசாயிகள் முன்னணி பிரிவின் மாநிலச் செயலா் முனேஷ் கோதராவை (35) தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறி அவருடைய கணவா் சுட்டுக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வீட்டில் சமையலறையில் கடந்த சனிக்கிழமை முனேஷ் கோதரா அவருடைய சகோதரியுடன் செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அவருடைய கணவா் சுனில், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மனைவியை சுட்டுக் கொன்றாா்.

சுனில் முன்னாள் ராணுவ வீரராவாா். அவா், தனியாா் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணிபுரிந்துவருகிறாா்.

மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்ததால் சுட்டுக் கொன்ாக சுனிலின் தந்தை புகாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய சுனிலை தேடி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா். முனேஷ் கோதராவுக்கு எதிரான தகாத உறவு குற்றச்சாட்டை அவரது குடும்பத்தினா் மறுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com