தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
70 உறுப்பினா்கள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்வீா் சிங் தெரிவித்திருந்தாா்.