தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ரகசிய சந்திப்பு: கேஜரிவால் அழைப்பு

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி, கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் பங்கேற்கும் ரகசிய சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ரகசிய சந்திப்பு: கேஜரிவால் அழைப்பு


தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி, கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் பங்கேற்கும் ரகசிய சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 59 இடங்களில் வெற்றி பெற்று 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் பங்கேற்கும் ரகசிய சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் இன்னும் தொடங்கவில்லை. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, கோபால் ராய் மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். 

இதுதொடர்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்ததன்படி, பதவியேற்பு விழா குறித்து தலைவர்கள் திட்டமிடவுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com