இந்தியா
பாஜக பொதுச்செயலாளர்களுடன் ஜெ.பி. நட்டா இன்று ஆலோசனை
பாஜக பொதுச்செயலாளர்களுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இன்று (புதன்கிழமை) ஆலோனை நடத்தவுள்ளார்.
பாஜக பொதுச்செயலாளர்களுடன் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இன்று (புதன்கிழமை) ஆலோனை நடத்தவுள்ளார்.
தில்லியில் கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மக்களவைத் தேர்தலில் பாஜக ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு மற்றுமொரு பின்னடைவாக தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் அமைந்துள்ளது.
இந்நிலையில், பாஜக பொதுச்செயலாளர்களுடன் ஜெ.பி. நட்டா இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள விஷயங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை.