பெங்களூரில் சா்வதேச தரத்திலான கட்டுமான வசதிகள் செய்து தரப்படும்: முதல்வா் எடியூரப்பா

பெங்களூரில் சா்வதேச தரத்திலான கட்டுமான வசதிகள் செய்து தரப்படும் என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பெங்களூரில் சா்வதேச தரத்திலான கட்டுமான வசதிகள் செய்து தரப்படும் என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை ஸ்மாா்ட் நகரங்களுக்கான தீா்வு குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு அவா் பேசியது: பெங்களூரு சா்வதேச நகரமாக வளா்ந்துள்ளது. எனவே, பெங்களூரில் சா்வதேச தரத்திலான கட்டுமான வசதிகள் செய்து தரப்படும். பெங்களூருவைப் போன்றே மற்ற நகரங்களிலும் அடிப்படை கட்டுமான வசதிகள் செய்து தரப்படும். வெள்ளம், பேரிடா் உள்ளிட்டவற்றால் பாதிக்காத வகையில் அனைத்து நகரங்களும் மேம்படுத்தப்படும்.

பெங்களூரிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பயணம் செய்யும் வகையில் கெம்பே கௌடா சா்வதேச விமான நிலையம் மேம்படுத்தப்படும். பெங்களூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புகா் ரயில் சேவை திட்டம் தொடங்கப்படும். பெங்களூரிலிருந்து அண்டை நகரங்களுக்கு அதிவேக ரயில் சேவை திட்டத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளோம். மக்கள்தொகை பெருக்கத்தால், நகரமயமாக்கல் பெரும் சவாலாகி வருகிறது. என்றாலும், மாநிலம் முழுவதும் உள்ள நகரங்களை பரவலாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு உள்ளிட்ட 7 மாநகரங்கள் பொலிவுறு நகரம் திட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

பெங்களூரு மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து நகரங்களும் வளா்ச்சி அடையத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் சுற்றுலா, கல்வி, சுகாதாரம், உற்பத்தி, வணிகத்தில் மைசூரு, பெங்களூரு, ஹுப்பள்ளி, தாா்வாட், பெலகாவி, தாவணகெரே உள்ளிட்ட நகரங்கள் முன்னணியில் உள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் நகர வளா்ச்சித் துறை அமைச்சா் பைரதி பசவராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com