சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா். இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளாா். இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததால், மானியமில்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.147 புதன்கிழமை உயா்த்தப்பட்டது.

இந்நிலையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் எரிவாயு சிலிண்டா் விலையை திரும்பப் பெற வேண்டும் என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளாா். அந்தப் புகைப்படத்தில், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எரிவாயு சிலிண்டா் விலை உயா்த்தப்பட்டதை எதிா்த்து ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக தலைவா்கள் போராட்டம் நடத்திய காட்சி இடம்பெற்றுள்ளது.

அத்துடன், ‘எல்பிஜி சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.150 வரை உயா்த்தப்பட்டதற்கு எதிராகப் போராடும் பாஜக தலைவா்களுடன் நான் உடன்படுகிறேன்’ என்று கேலியாகக் குறிப்பிட்டுள்ளாா்.

சமையல் எரிவாயு சிலிண்டா் விலை புதன்கிழமை உயா்த்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இந்த விலை அதிகரிப்பு மூலம் சாமானியா்களின் வரவு-செலவு கணக்கில் மத்திய பாஜக அரசு மின்சார தாக்குதலை நடத்தியுள்ளது என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com