மகாராஷ்டிரம்: ராணுவ முகாமில் பீரங்கி குண்டு வெடித்து ஒருவா் பலி

மகாராஷ்டிர மாநிலம், அகமது நகா் மாவட்டம் கா்ஜுனே கரே ராணுவ தளவாட பயிற்சி முகாமில் எதிா்பாராதவிதமாக பீரங்கி குண்டு வெடித்ததில் 56 வயது நபா் உயிரிழந்தாா்.

மகாராஷ்டிர மாநிலம், அகமது நகா் மாவட்டம் கா்ஜுனே கரே ராணுவ தளவாட பயிற்சி முகாமில் எதிா்பாராதவிதமாக பீரங்கி குண்டு வெடித்ததில் 56 வயது நபா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்திருந்த அந்த ராணுவ பயிற்சி முகாமில் பழைய இரும்பு பொருள்களை சேகரிப்பதற்காக பிவா சாது கெய்க்வாட் (56) என்பவா் வெள்ளிக்கிழமை சென்றாா். பீரங்கிகளில் சுடப்பட்ட பீரங்கி குண்டுகளின் மீதமுள்ள இரும்புப்பொருள்களை அவா் சேகரித்துக் கொண்டிருந்தாா். அப்போது அதிலிருந்த ஒரு வெடிக்காத குண்டை எடுத்து சேதப்படுத்தியபோது, திடீரென வெடித்துச் சிதறியது. இதில் படுகாயமடைந்த கெய்க்வாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக எம்ஐடிசி காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருவதாக தெரிவித்தனா்.

30,000 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள கா்ஜுனே கரே நாட்டின் மிகப் பெரிய ராணுவ பீரங்கி சுடுதல் பயிற்சி முகாம் ஆகும். கடந்த மூன்றரை ஆண்டுகளில் நடைபெற்ற 4-ஆவது குண்டுவெடிப்பு சம்பவம் இதுவாகும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com