ஹரியானாவின் ஹிஸார் மாவட்டத்தில் திங்களன்று வேன் மீது ட்ரக் மோதியதில் 6 பேர் பலியாகினர். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
ராக்கி ஷாப்பூர் கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடந்தது. திருமண விழாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, வேகமாக வந்த ட்ரக் மோதியதால் வேன் நிலைகுலைந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பலியானவர்கள் ஹிஸார் மாவட்டத்திலுள்ள சுலி பக்ரியன் கிராமத்தில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.