மகளுடன் நகைக்காகத் தகராறு: 7ஆவது மாடியிலிருந்து குதித்து தாய் தற்கொலை

மும்பையில் மகளுடன் நகைக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியிலிருந்து குதித்து 50 வயது மதிக்கத்தக்க தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மும்பையில் மகளுடன் நகைக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக அடுக்குமாடி குடியிருப்பின் 7ஆவது மாடியிலிருந்து குதித்து 50 வயது மதிக்கத்தக்க தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மும்பை போலீஸ் கூறுகையில்,

தாய் மற்றும் மகளுக்கு இடையே நகைக்காக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த 31 வயது மகள் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது தந்தை உடனடியாக மகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். 

பின்னர் வீடு திரும்பியபோது, மனைவியைக் காணவில்லை. அவரைத் தேடியபோது, வீடு அமைந்துள்ள 7ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com