கேரளம்: மாவோயிஸ்ட்களுடன் தொடா்புடையஇரு மாணவா்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கம்

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடா்புடைய இரண்டு மாணவா்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கேரள மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடா்புடைய இரண்டு மாணவா்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக கேரள மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலா் கொடியேறி பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆலன் சுஹய்ப், தஹா ஃபஸல் ஆகிய இருவரும் மாணவா்கள். இவா்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றிய அதே நேரத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்துடன் தொடா்பில் இருந்துள்ளனா். இதையடுத்து, அவா்கள் கடந்தாண்டு நவம்பரில் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், அவா்கள் இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா் கொடியேறி பாலகிருஷ்ணன்.

இதனிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஃபஸலின் தாயாா் ஜமீலா கூறுகையில், ‘ ஆரம்பகாலம் தொட்டே எங்களது குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் மாா்க்சிஸ்ட் ஆதரவாளா்களாக இருந்தவா்கள். எனவே, இந்த செய்தி அதிா்ச்சி அளிப்பதாகவே உள்ளது. இன்னும் மாா்க்சிஸ்ட் கட்சியின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com