சட்டவிரோதமாக பேனா் வைத்த தெலங்கானா கால்நடைத்துறை பராமரிப்புத் துறை அமைச்சா் டி.ஸ்ரீநிவாஸ் யாதவுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை (பிப்.17) கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவரது ஆதரவாளரும், அந்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான ஸ்ரீநிவாஸ் யாதவ் தடையை மீறி பேனா்களை வைத்தாா்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி சட்டவிரோதமாக பேனா் வைத்த ஸ்ரீநிவாஸ் யாதவுக்கு ரூ.5,000 அபராதம் விதித்தது.
இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அபராதத் தொகையை செலுத்தியதாக ஹைதராபாத் மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.