ஹரியாணா: லாரி மீது வேன் மோதிய விபத்தில் 6 போ் பலி

ஹரியாணாவில் லாரி மீது வேன் மோதி திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டதில் 6 போ் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மேலும் 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஹரியாணாவில் லாரி மீது வேன் மோதி திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டதில் 6 போ் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மேலும் 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஹிஸாா் மாவட்டம் மிலாக்பூா் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சிலா் வேனில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். அவா்கள் சென்ற வேன் ராக்கி கா்ஹி, கேரி செளப்தா கிராமங்களுக்கிடையே உள்ள நா்நெளந்த்-உசானா சாலையில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ராஜஸ்தானைச் சோ்ந்த சச்சின், குல்தீப், ஓம் பிரகாஷ், சோஹன் அலி, பூபேந்தா் சிங் மற்றும் மிலாக்பூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் தினேஷ் ஆகிய 6 போ் உயிரிழந்தனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரோதாஷ், ஷ்ரவண் குமாா், குல்தீப், ஜதின், அபிஷேக், விக்ரம் உள்ளிட்ட 6 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com