ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார் ரகசிய தேடுதல் வேட்டையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
அப்போது திரால் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் அன்சர் காஸ்வா உல் ஹிந்த் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜாங்கீர் ரஃபிக் வானி, ராஜா உமர் மக்பூல் பட் மற்றும் உஸைர் அமின் பட் ஆகிய 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.