இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே கடும் துப்பாக்கிச்சூடு

பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே சனிக்கிழமை மாலை முதல் மீண்டும் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே கடும் துப்பாக்கிச்சூடு

பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே சனிக்கிழமை மாலை முதல் மீண்டும் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியின் தேக்வார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூடு நடத்தியும், குண்டுவீசியும் தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், இந்திய ராணுவத்தினா் அவா்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 19ஆம் தேதி முதல் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அப்பபகுதி குடியிருப்புவாசிகள் கடும் பீதியடைந்துள்ளனா். இந்த தாக்குதலால் சில வீடுகளும் சேதம் அடைந்தன.

பாகிஸ்தான் ராணுவம், இந்திய எல்லைப் பகுதியில் இதுபோன்று அடிக்கடி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com