அமுல்யா பட்நாயக் பணி நிறைவுபெறுவதை முன்னிட்டு தில்லிக்கு புதிய காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
மேலும் அடுத்தகட்ட உத்தரவு வரும் வரை தில்லி காவல்துறை தலைவராகவும் வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப்பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம் அல்லது ஏஜிஎம்யூடி கேடரில் 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேரச்சி பெற்றவர் ஸ்ரீவஸ்தவா.
தில்லியில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை 39 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.