நிதிப் பற்றாக்குறை 128.5 சதவீதத்தை எட்டியது

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 128.5 சதவீதத்தை எட்டியுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 128.5 சதவீதத்தை எட்டியுள்ளதாக தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சிஜிஏ மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில் இந்தியாவின் நிதிப் பற்றாக் குறையானது ஜனவரி இறுதி நிலவரப்படி 128.5 சதவீதத்தை எட்டியுள்ளது. 2018-19 நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 12.5 சதவீதமாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில், வரவுக்கும் மற்றும் செலவுக்கும் இடையிலான இடைவெளியான நிதிப் பற்றாக்குறை ரூ.9,85,472 கோடியாக உள்ளது.

நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை ரூ.7,66,846 கோடியாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், தற்போது நிதிப் பற்றாக்குறை அந்த இலக்கை தாண்டியுள்ளது என சிஜிஏ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com