பிகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
பெகுசராய் மாவட்டம், பஞ்சமுகி தோலா அருகே நேற்றிரவு 10 மணியளவில் மூன்று பேர் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு, திடீரென அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது வேகமாக மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜ்குமார் சாஹ்னி(41), ராஜா சாஹ்னி(26) மற்றும் தீனா சாஹ்னி(24) ஆகிய மூவர் வாகனம் மோதி உயிரிழந்தவர்கள் என போலீஸாரல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.