ஜார்கண்டில் 7 மாவோயிஸ்டுகள் கைது 

ஜார்கண்டில் 7 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
ஜார்கண்டில் 7 மாவோயிஸ்டுகள் கைது 

ஜார்கண்டில் 7 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜார்க்கண்ட் மாநிலம், சண்ட்வா அருகே கடந்த நவம்பர் 22ஆம் தேதி போலீசாரின் ரோந்து வாகனத்தின் மீது, மாவோயிஸ்டுகள் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில், நான்கு போலீசார் இறந்தனர். 

இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 மாவோயிஸ்டுகளை லதேஹர் மாவட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முன்னதாக கடந்த சனிக்கிழமை அங்குள்ள திதிர் மஹுவா வனப்பகுதியில் 5 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com