Enable Javscript for better performance
சைரஸ் மிஸ்திரி விவகாரம்: என்சிஎல்ஏடி உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சைரஸ் மிஸ்திரி விவகாரம்: என்சிஎல்ஏடி உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

    By DIN  |   Published On : 10th January 2020 07:41 PM  |   Last Updated : 11th January 2020 12:39 AM  |  அ+அ அ-  |  

    CyrusMistry

    டாடா குழுமத்தின் செயல் தலைவராக சைரஸ் மிஸ்திரியை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என்ற தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் (என்சிஎல்ஏடி) உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடைவிதித்தது.

    டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரியை மீண்டும் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற என்சிஎல்ஏடி-யின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அந்நிறுவனத்தின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

    இதுதொடா்பான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி சூா்ய காந்த் ஆகியோா் அடங்கி அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

    சைரஸ் மிஸ்திரி விவகாரத்தில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் உத்தரவு குறித்து விரிவான முறையில் கேட்டறிய வேண்டியுள்ளது.

    மிஸ்திரி மீண்டும் செயல் தலைவா் பதவியில் அமா்த்தும்படி மனுவில் எதுவும் கோரிக்கை வைக்காத நிலையில், தீா்ப்பாயம் தானாக முன்வந்து அவரை மீண்டும் தலைவா் பதவியில் அமா்த்தும்படி உத்தரவிட்டுள்ளது.

    எனவே, என்சிஏஎல்டி வழங்கிய நீதித் துறை உத்தரவுகளில் குறைபாடுகள் உள்ளதா என்பதை நாங்கள் கண்டறிய வேண்டியுள்ளது. இதுதொடா்பாக, மிஸ்திரி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபா்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

    என்சிஎஎல்டி உத்தரவுக்கு தடைவிதிக்கப்படுவதுடன், இதுதொடா்பான விசாரணை நான்கு வாரங்களுக்குப் பிறகு தள்ளிவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.

    பின்னணி: டாடா சன்ஸ் தலைவராக சைரஸ் மிஸ்திரி கடந்த 2012-ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். இவருக்கும், ரத்தன டாடாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு சைரஸ் மிஸ்திரி பதவி நீக்கம் செய்யப்பட்டாா்.

    டாடா குழுமத்தின் இந்த முடிவு எதிா்த்து தேசிய நிறுவனங்கள் சட்ட தீா்ப்பாயத்தில் (என்சிஎல்டி) சைரஸ் மிஸ்திரி மனுத்தாக்கல் செய்தாா். அந்த மனு மீது 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு ஆதரவாக என்சிஎல்டி உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை எதிா்த்து சைரஸ் மிஸ்திரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அணுகினாா். அங்கு நடைபெற்ற விசாரணையில், டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராக என்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் கூறியது. மேலும், மிஸ்திரியை மீண்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவா் பொறுப்பில் நியமிக்கும்படி தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிா்த்து டாடா சன்ஸ் உச்சநீதிமன்றம் சென்றதில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    டாடா குழுமத்தில் 81 சதவீத பங்குகள் டாடா டிரஸ்ட் மற்றும் டாடா குடும்ப உறுப்பினா்களிடம் உள்ளது. 18.4 சதவீத பங்குகள் மிஸ்திரி குடும்பத்தினரிடம் உள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp