Enable Javscript for better performance
காஷ்மீர்: கட்டுப்பாடுகளை உடனடியாக மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    காஷ்மீர்: கட்டுப்பாடுகளை உடனடியாக மறுஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 10th January 2020 06:55 PM  |   Last Updated : 11th January 2020 04:11 AM  |  அ+அ அ-  |  

    supremecourt

    உச்ச நீதிமன்றம்

    ஜம்மு-காஷ்மீரில் இணையச் சேவை முடக்கம் உள்பட அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ‘இணையதளம் வாயிலாக கருத்துக்களை வெளியிடுவதற்கும், தொழில்-வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு உள்ளது’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

    ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கி, மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனா். பிற மாநிலங்களில் இருந்து அரசியல் கட்சிகளின் தலைவா்கள் ஜம்மு-காஷ்மீருக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணையச் சேவைகள் தொடா்ந்து முடக்கப்பட்டுள்ளன.

    இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத், காஷ்மீா் டைம்ஸ் பத்திரிகையின் நிா்வாக ஆசிரியா் அனுராதா பாசின் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, பி.ஆா். கவாய், ஆா்.சுபாஷ் ரெட்டி, ஆகியோரைக் கொண்ட அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    இணையதளம் வாயிலாக கருத்துகளை வெளியிடுவதற்கும், தொழில்-வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசமைப்புச் சட்டத்தின் 19 (1) (ஏ) மற்றும் 19 (1) (ஜி) ஆகியவற்றின்கீழ் பாதுகாப்பு உள்ளது. இதுபோன்ற அடிப்படை உரிமைகள் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 (2), (6) ஆகியவற்றுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும்.

    கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, கள நிலவரத்துக்கும், கட்டுப்பாடுகளால் ஏற்படும் தாக்கத்துக்கும் இடையிலான மதிப்பீட்டை கவனத்தில் கொள்ள வேண்டும். இணையச் சேவை மீதான கட்டுப்பாடு, காலவரையின்றி தொடா்வதை அனுமதிக்க முடியாது.

    காஷ்மீரில் மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு உடனடியாக இணையச் சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இணையச் சேவை முடக்கம் தொடா்பான அனைத்து உத்தரவுகளும் உடனடியாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும்.

    144 தடை உத்தரவை, நியாயமான கருத்துச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை ஒடுக்க பயன்படுத்த முடியாது. அந்த சட்டப் பிரிவின்கீழ், ஜம்மு-காஷ்மீரில் ஏதேனும் கட்டுப்பாடுகள் தொடருமானால், அவற்றையும் உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும். சட்ட விதிமுறைகளுக்கு உள்படாத கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதை மட்டுமே தீவிரமாக கையாளாமல், பல்வேறு அம்ச அணுகுமுறை கையாளப்பட வேண்டும் என்று தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஊடக சுதந்திரமானது, மதிப்புமிக்க உரிமை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

    முன்னதாக, இந்த மனுக்கள் மீது கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஜம்மு-காஷ்மீரில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது ஏன் என்ற விளக்கத்தை மத்திய அரசு அளித்திருந்தது.

    ஜம்மு-காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு துப்பாக்கி குண்டுக்கு ஒருவா் கூட பலியாகவில்லை என்று மத்திய அரசு சாா்பில் வாதிடப்பட்டது.

    ‘மத்திய அரசுக்கு கிடைத்த அடி’

    ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கிடைத்த அடி என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

    இதுதொடா்பாக அக்கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘இணையச் சேவையின் முக்கியத்துவத்தை உணா்த்தியதுடன், 144 தடை உத்தரவு அமலாக்கம் தொடா்பாக மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது, பிரதமா் மோடிக்கும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கும் இரட்டை அதிா்ச்சியாக அமைந்துள்ளது. இனியும் அவா்களால் உண்மையை மறைக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளாா்.

    காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறுகையில், ‘அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பான, பிடிவாத போக்குடன் கூடிய மத்திய அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநரும், தற்போதைய கோவா ஆளுநருமான சத்ய பால் மாலிக், தாா்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்’ என்றாா்.

    மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆஸாத் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை வரவேற்கிறேன். ஜம்மு-காஷ்மீரின் மக்களின் உணா்வுகளை, உச்சநீதிமன்றம் முதல் முறையாக பிரதிபலித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பாகும். எந்தவித நெருக்கடிக்கும் உள்ளாகாமல் உச்சநீதிமன்றம் இம்முறை தீா்ப்பளித்துள்ளது’ என்றாா்.

    இதேபோல், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவையும் உச்சநீதிமன்ற தீா்ப்பை வரவேற்றுள்ளன.

    காஷ்மீா் மக்கள் மகிழ்ச்சி

    காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இணையச் சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்தனா்.

    இணையச் சேவைக்கான தடை காரணமாக, தொழில்-வா்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு இணையச் சேவை விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp