ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்முவை, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று சந்தித்தார்.
ஜார்க்கண்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி மொத்தமுள்ள 81 இடங்களில் 47 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து அம்மாநிலத்தின் 11-ஆவது முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ராஞ்சியில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் திரௌபதி முர்முவை, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது முதல்வருடன் அவரது மனைவி கல்பனா முர்மு சோரனும் சென்றிருந்தார்.
முன்னதாக இதே மாதத்தில் ஹேமந்த் சோரன், தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.