நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு: திகார் சிறையில் ஒத்திகை
புது தில்லி: நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக, திகார் சிறையில் நேற்று ஒத்திகை நடைபெற்றது.
கடந்த 2012-ஆம் ஆண்டில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ கூட்டுப் பாலியல் பலாத்காரம், மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நால்வரையும் தூக்கிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று நான்கு குற்றவாளிகளை தூக்கிடும் வகையில் போலியாக நான்கு பொம்மைகளை வைத்து தூக்கிட்டு சிறை நிர்வாகம் ஒத்திகைப் பார்த்துள்ளது. ஒவ்வொரு குற்றவாளியின் உடல் எடையையும் கணக்கில் எடுத்து, அந்தந்த எடைக்கு ஏற்ப கல் மற்றும் மணலால் பொம்மைகளை உருவாக்கி அதனை தூக்கிட்டு சிறை நிர்வாகிகள் ஒத்திகை நடத்தியதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நான்கு குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுவார்கள் என்றும் குற்றவாளிகள் நால்வரையும், மீரட்டைச் சேர்ந்த பவன் ஜல்லாட் தூக்கிலிடுவார் என்றும் உத்தரப்பிரதேச சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூக்கிலிடவிருக்கும் குற்றவாளிகளுடன், சிறைத் துறை அதிகாரிகள் தினமும் பேசி, அவர்களது மனநிலையை சோதித்து வருகிறார்கள்.