டேஹ்ராடூன்: ஆசிட் வீச்குக்கு ஆளான பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சபாக் படம் எதிரொலியாக, ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு பென்ஷன் அளிக்கும் திட்டத்தை உத்தரகண்ட் அரசு பரிசீலனைக்கு எடுத்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது ஆசிட் வீச்சுக்கு ஆளான 10 - 11 பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ரேகா ஆர்யா இது பற்றி தெரிவிக்கையில், ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 - 6000 வரை பென்ஷன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மரியாதையோடு தங்கள் வாழ்க்கையை வாழ முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கு உத்தரக்கண்ட் அமைச்சரவை அனுமதி கிடைத்ததும், திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.