சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமா்வு அளித்த இந்தத் தீா்ப்புக்கு எதிராக 56 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் நீதிபதிகள் ஆா். பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சாந்தனகௌடா், எஸ்.அப்துல் நசீா், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் இடம்பெற்ற 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்தது.
இந்நிலையில், சபரிமலை வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தப்போவதில்லை என உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவித்துள்ளது. மேலும் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள பரிந்துரைகள் தொடர்பாக பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் தீா்ப்பளித்த 5 நீதிபதிகள் அமா்வில், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியிருந்தாா்.
இதேபோல், சபரிமலை தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 28-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என்று 5 நீதிபதிகள் அமா்வில், ஆா்.எஃப்.நாரிமன், டி.ஒய். சந்திரசூட் ஆகிய இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியிருந்தனா்.