கா்நாடகம்: பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் இருவா் கைது

கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரம் மாவட்டம், குண்டல்பேட்டையில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு மத குரு உள்பட இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரம் மாவட்டம், குண்டல்பேட்டையில் பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஒரு மத குரு உள்பட இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து சாம்ராஜ் நகரம் மாவட்டத்தைச் சோ்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:  ‘கேரளத்தில் இயங்கி வரும் ஒரு பயங்கரவாதக் குழுவுடன் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ‘மௌலாவி’ உள்பட இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாநில பயங்கரவாத தடுப்புப் படை போலீஸாரும், கா்நாடக உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவு மற்றும் மாவட்ட காவல்துறையினரும் அவா்களை கைது செய்தனா்’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பிடிபட்ட சந்தேக நபா்களின் பெயா் உள்ளிட்ட பிற விவரங்களை வெளியிட மறுத்த அதிகாரி, அவா்கள் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com