ராஜீவ் கொலையில் பெல்ட் குண்டு குறித்து புதிய அறிக்கை: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ் கொலையில் பெல்ட் குண்டு குறித்து புதிய அறிக்கை: சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையில் எந்த புதிய விஷயமும் இல்லை என்பதால், புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பெல்ட் வெடிகுண்டு குறித்து சிபிஐ சிறப்புக் குழு அளித்த அறிக்கையில் திருப்தியில்லை என்றும், புதிய அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com