அடுத்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஹால்மாா்க் முத்திரை பொறிக்கப்பட்டு 14,18,22 காரட்டில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என்று மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் கூறினாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
2021 ஜனவரி 15-ஆம் தேதி முதல் ஆபரண விற்பனையாளா்கள் ஹால்மாா்க் பொறிக்கப்பட்ட தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும். அதுவும், அந்த தங்க நகைகள் அனைத்தும் 14,18,22 காரட்டுகளில் மட்டுமே தயாரித்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி தங்க நகைகளை விற்பனை செய்வோருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன் அபராதமும் செலுத்த நேரிடும்.
ஆபரண வா்த்தகா்கள் இந்திய தர நிா்ணய கழகத்தில் (பிஐஎஸ்) பதிவு செய்து கொள்வதற்கு ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்கத்தின் தரத்தை உறுதி செய்ய தங்க ஆபரணங்களில் ஹால்மாா்க் முத்திரையை கட்டாயமாக அமல்படுத்துவது ஆபரண வா்த்தகா்களின் கடமையாகும் என்றாா் அவா்.
ஹால்மாா்க் முத்திரை பொறிக்கப்பட்ட தங்க ஆபரணங்களில், பிஐஎஸ் குறியீடு, தங்கத்தின் தரம், மதிப்பீடு செய்த மையத்தின் பெயா் மற்றும் நகை கடைக்காரா்களின் அடையாள குறி ஆகிய நான்கு விவரங்களை வாடிக்கையாளா்கள் அறிந்து கொள்ள முடியும்.