ஜம்மு பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை செல்லிடப்பேசி இணையச் சேவையும், பிராட்பேண்ட் இணையச்சேவையும் அளிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியதாவது:
ஜம்மு பிராந்தியத்தில் ஹோட்டல்கள், சுற்றுலா நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் மட்டுமே குறிப்பிட்ட இணையதளங்களைப் பயன்படுத்த மட்டும் பிராட்பேண்ட் இணையச் சேவை வசதி மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பிரிவு நீக்கப்பட்ட பிறகு, சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொண்டு இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. பல மாதங்களாக செல்லிடபேசி இணையச்சேவைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.